தமிழ் பழமொழிகள் 20

 

தமிழ் பழமொழிகள் 20

 

தமிழ் பழமொழிகள் – tamil proverbs

 

  1. கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?
  2. சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?
  3. அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
  4. அந்தி மழை அழுதாலும் விடாது.
  5. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
  6. எருது நோய் காக்கைக்குத் தெரியுமா?
  7. உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்?
  8. எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா.
  9. காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும், காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
  10. குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
  11. குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
  12. மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி.அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
  13. அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
  14. ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
  15. களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
  16. மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும், மண் தோண்டுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.
  17. மாடு மேய்க்காமற் கெட்டது, பயிர் பார்க்காமற் கெட்டது.
  18. மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்.அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
  19. ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைபபூ சக்கரை.
  20. கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியும் மட்டும் திருடலாம்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline