‘கரும்பு தின்னக் கூலி கொடுக்கணுமா?’னு சொல்வழக்கு ஒண்ணு இருக்கு. ஆனா, கரும்பு திங்காததால, நாமெல்லாம் கூலி கொடுத்துட்டிருக்கோம் இந்தக் காலத்துல! அதாவது, நம்மளோட உணவுகள் எல்லாமே, நாக்குக்கு மட்டுமில்லீங்க ஒட்டுமொத்த உடம்புக்கும் ஏத்தமாதிரி அமைச்சு வெச்சுருக்காங்க முன்னோருங்க. ஒவ்வொண்ணுலயும் என்னென்ன சத்து இருக்கு… மருந்து இருக்குனு பார்த்துப் பார்த்து அனுபவத்தால கண்டுபிடிச்சு பழக்கப்படுத்திட்டு போயிருக்காங்க. ஆனா, அந்த வரிசையில வர்ற கரும்பை நாமெல்லாம் இப்ப சாப்பிடறதே அபூர்வமா இருக்கு. கரும்பைக் கடிச்சு தின்னக்கூட நேரம் இல்லாம, கரும்புச்சாறு வாங்கி குடிச்சுட்டு பொழப்பை ஓட்டிட்டிருக்கோம். கரும்பு கிடைக்கிற சீசன்ல, கரும்பை வெட்டி நல்லா பல்லால கடிச்சி மென்னு சுவைச்சா… பல்லுங்க பளீர்னு வெள்ளையா இருக்கும். இதனால, பல் சுத்தத்துக்காக டாக்டருங்கிட்ட வருஷத்துக்கு ஒரு தடவையோ… ரெண்டு தடவையோ கொடுக்கற செலவு மிச்சமாகும்தானே
பல் சுத்தத்துக்காக இயற்கை டாக்டரு
Related Posts

வீடு கட்ட கடன்: கவனத்தில் கொள்ளவேண்டியவை

வறண்ட கிணறுகளை உயிர்ப்பிக்கும் ‘வாட்டர் காந்தி’

மண்ணில்லா தீவன வளர்ப்பு முறை ( Low cost Hydroponics )

அழிந்து வரும் பாரம்பரிய விதைகள்

தலை முடியின் பல பிரச்சனைகளும் அதன் தீர்வுகளும்

பழந்தமிழர் அளவைகள்..!

வீட்டுத் தோட்டம் -3

மனிதனின் மந்திரச் சாவியே – செக்ஸ்தான்!

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

