நரம்புக்கருவி யாழ்

யாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச்
சிறப்பு வாய்ந்தது ஆகும்..

யாழ் என்பதற்கு நரம்புகளால் யாக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள்…

பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத்
தோற்கருவி,
துளைக்கருவி,
நரம்புக் கருவி,
மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்துவர்..

இவற்றில்  நரம்புக்கருவியாகிய யாழே,
தமிழர் வாசித்த முதல் இசைச் கருவியாகும்..

நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ்..

இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் வழிவந்த வீணை இன்று நரம்பிசைக் கருவிகளில் முதன்மையிடம் வகிக்கிறது..

யாழின் வரலாறு:

குறிஞ்சி நிலத்தில் பயன்பாட்டில் இருந்த  கருவிகளின் ஒன்று வில்..
வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து
அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையே
யாழின் உருவாக்கத்திற்கு தோற்றுவாயக்
இருக்க வேண்டும்..

இந்த வில்லே வில்யாழாக மலர்ந்தது..

பதிற்றுப்பத்து, வில்யாழ்
முல்லை நிலத்திலேயே முதலில்
தோன்றியது என்று கூறினாலும்,
குறிஞ்சி நிலத்தில் தோன்றியது என்பதே
பொருத்தமுடையது..

ஏனெனில் குறிஞ்சி நிலத்தில் தான் வேட்டைத் தொழில் மிகுதியாக நடைபெற்றது..
இந்த வில்யாழ் மனிதனின் முயற்சியால், உழைப்பால் பல்வகை யாழாக மலர்ந்தது..

யாழின் வடிவத்தைத் துல்லியமாக அறியப் போதிய சிற்பங்களோ, ஓவியங்களோ இன்று நம்மிடம் இல்லை..

சங்க இலக்கியங்களான புறநானூறு , கலித்தொகை , பரிபாடல் மற்றும் ஆற்றுப்படை நூல்களிலும், திருக்குறளிலும், சிலப்பதிகாரம், பெருங்கதை, சீவகசிந்தாமணி
முதலிய காப்பியங்களிலும் பக்தியிலக்கியங்களிலும் யாழ் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ன, என்றாலும் யாழின் வகைகளைப் பேரியாழ், சீறியாழ், மகரயாழ்,  சகோடயாழ் என்று  அறிய முடிகிறதே ஒழிய அதன் வடிவினை அறிய முடியவில்லை..

பல்லவர் காலக் கோயிலான
காஞ்சி கைலாசநாதர் கோயில்
(இராஜசிம்மன்)

பொன்செய் நல்துணையீஸ்வரம் கோயில் (பராந்தகன்),

திருமங்கலம் கோயில் (உத்தம சோழன் ) ஆகியவற்றில்
யாழ்ச் சிற்பங்கள் காணப்படுகின்றன..

யாழ் கருவியின் வளர்ச்சி:

வில்லின் அடியாகத் தோன்றிய வில்யாழ், முதலில் குறிஞ்சி நிலத்தில் தோன்றியது என்றாலும் நாளடைவில் முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற நான்கு நிலங்களுக்கும் உரியதாக அமைந்தது..

யாழினை இசைப்பதற்கென்றே ‘பாணர்’ என்ற
குழு இருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம்..

யாழ் மீட்டுவதையே தொழிலாக உடையவர்கள் என்றாலும் அவர்கள் யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்பாணர் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர்..
அதில் யாழ்ப்பாணர், இசைக்கும் யாழின் அடிப்படையில் பெரும்பாணர், சிறுபாணர் என்று பகுக்கப்பட்டனர்ர்..

யாழ் இசைக்கலைஞர்களான பாணர்கள் பெயரிலேயே இரண்டு சங்கநூல்கள்
தோன்றியுள்ளதிலிருந்து, யாழ் மற்றும் பாணர்களின்
மதிப்பை அறியமுடிகிறது..

அந்நூல்களில், மன்னர்கள்
பாணர்களைப் போற்றியும், புரந்தும் வந்துள்ளமையைக்
காட்டுகின்றன..

யாழ், பாடிக் கொண்டே இசைக்கும் கருவியாக இருந்துள்ளது..

சாதாரண மக்களிடம் புழக்கத்தில் இருந்த யாழ்,
ஒரு காலக்கட்டத்தில் தெய்வத்தன்மை பெற்று வணக்கத்திற்கு உரியதாக
மாறியது..

தமிழர்கள் யாழினின்று எழும் இசைக்கே முதன்மை அளித்தனர்..

அதனாலேயே ஒரு நரம்பில் தொடங்கி மூன்று, ஐந்து, ஏழு….. என்று ஆயிரம் நரம்புகள் கொண்ட யாழ் உருவாகியது..

தொடக்கத்தில் வடிவம் பற்றிய சிந்தனை இல்லையென்றாலும் பின்னர் மகரயாழ்,
செங்கோடுயாழ் எனப் பல வகையான யாழ்கள் தோன்றின..

இவ்வாறாக யாழ் கி.பி.9-ஆம் நூற்றாண்டுவரை பலவகையாக வளர்ந்தது..

இதற்குப்பிறகு வடிவில் ஓரிரு வேறுபாடுகள் கொண்டு வீணையாக வளர்ச்சி கண்டது..

அந்த வீணையே இசையுலகில் இன்றளவும் முதலிடம் வகிக்கிறது…

யாழும், வீணையும்:

சங்க இலக்கியம் மற்றும் முற்காலக் காப்பியங்களில்
இசைக் கருவியாக யாழ் மட்டுமே இடம் பெற்றுள்ளது..

ஆனால்,
பக்தியிலக்கிய காலத்தில் யாழும் அதன்  படிவளர்ச்சியான வீணையும் ஒருங்கே  காணப்பட்டன என்பதை,
‘ஏழிசை யாழ்’,
‘வீணை முரலக்கண்டேன்’,
‘பண்ணோடியைந்த வீணை பயின்றாய் போற்றி’
என்ற மாணிக்க வாசகரின் பாடல் வரிகள் பிரதிபலிக்கின்றன..

ஆனால்
கி.பி.9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீவக சிந்தாமணியின்
“வீணை என்ற யாழையும் பாட்டையும்” என்ற அடி,
யாழும், மிடறும் உடன்நிகழ்ந்த இசையே வீணை என்ற
பொருள் தருகிறது…

மேலும்,
“வெள்ளிமலை வேற்கண்ணாளைச் சீவகன் வீணை வென்றான்”
என்ற அடிக்கு உரை எழுதிய ஆசிரியர், சீவகன்
கந்தருவதத்தையை யாழும், பாட்டும் வென்றான்
என்று குறித்துள்ளார்..

எனவே, யாழே வீணை என்று குறிக்கப்பட்டு பிற்காலத்தில்
தனி இசைக்கருவியாக வளர்ந்தது என்பதை அறிய
முடிகிறது..

Source : Facebook

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline