வீட்டுத் தோட்டம் -3

வளர்ச்சி ஊக்கி

அரிசி கழுவிய தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மூடியினால் மூடி(சிறிது இடைவெளி இருக்கட்டும் ) வைக்கவும். ஒரு வாரத்தில் இந்த நீர் புளித்துவிடும் , மேற்பரப்பில் ஆடைபோல் படிந்திருப்பதை அகற்றிவிட வேண்டும். இதனுடன் அதைப்போல பத்து மடங்கு பசும்பாலை சேர்த்து மூடி வைக்கவும். அடுத்த ஏழு நாட்களில் இந்தக் கலவையில் மாவு, புரதம் மற்றும் கொழுப்பு சத்துகள் தனியாக பிரிந்து மேலே ஆடை போல மிதக்கும். மிதக்கும் இவற்றை நீக்கினால் மஞ்சள் வண்ணத்தில் ஒரு திரவம் கிடைக்கும். இந்த திரவத்தில் அதன் அளவில் மூன்றில் ஒரு பங்கு வெல்லத்தை கலந்து மூடி வைக்கவும். இதுதான் லேக்டிக் அமில பாக்டீரியா ரசம்.

நூறு மில்லி ரசத்தை இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து உபயோகிக்கலாம். குளோரின் தண்ணீர் உபயோகிக்கக்கூடாது.

இக்கலவை மிகச்சிறந்த பயிர் ஊக்கியாக செயல்படும்.காய்கறி செடி, கொடிகள் நன்கு செழித்து வளர்ந்து நிறைய காய்கள் காய்க்கும்.

(செய்முறை சிறிது சிரமம் போல் தோன்றினாலும், ஒரு முறை செய்து அதன் பலனை அறிந்துக் கொண்டீர்கள் என்றால் தயாரிக்க இனி தயங்கவே மாட்டீர்கள்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline