‘கரும்பு தின்னக் கூலி கொடுக்கணுமா?’னு சொல்வழக்கு ஒண்ணு இருக்கு. ஆனா, கரும்பு திங்காததால, நாமெல்லாம் கூலி கொடுத்துட்டிருக்கோம் இந்தக் காலத்துல! அதாவது, நம்மளோட உணவுகள் எல்லாமே, நாக்குக்கு மட்டுமில்லீங்க ஒட்டுமொத்த உடம்புக்கும் ஏத்தமாதிரி அமைச்சு வெச்சுருக்காங்க முன்னோருங்க. ஒவ்வொண்ணுலயும் என்னென்ன சத்து இருக்கு… மருந்து இருக்குனு பார்த்துப் பார்த்து அனுபவத்தால கண்டுபிடிச்சு பழக்கப்படுத்திட்டு போயிருக்காங்க. ஆனா, அந்த வரிசையில வர்ற கரும்பை நாமெல்லாம் இப்ப சாப்பிடறதே அபூர்வமா இருக்கு. கரும்பைக் கடிச்சு தின்னக்கூட நேரம் இல்லாம, கரும்புச்சாறு வாங்கி குடிச்சுட்டு பொழப்பை ஓட்டிட்டிருக்கோம். கரும்பு கிடைக்கிற சீசன்ல, கரும்பை வெட்டி நல்லா பல்லால கடிச்சி மென்னு சுவைச்சா… பல்லுங்க பளீர்னு வெள்ளையா இருக்கும். இதனால, பல் சுத்தத்துக்காக டாக்டருங்கிட்ட வருஷத்துக்கு ஒரு தடவையோ… ரெண்டு தடவையோ கொடுக்கற செலவு மிச்சமாகும்தானே
பல் சுத்தத்துக்காக இயற்கை டாக்டரு
Related Posts

மழை நீரை சேகரித்து, குடிநீராகஎத்தனை ஆண்டுகளுக்கு அந்த நீரைப் பயன்படுத்தலாம்?”

பக்கவாதத்தை தடுக்கும் உணவுகள்

உடலைப் பாதுகாக்கும் பருப்பு வகைகள்:

தூக்கமின்மையை விரட்ட அற்புத உணவுகள்! – செய்முறை இணைப்பு!

முடக்கத்தான் இலை

கல்லுப்பட்டி கோபாலய்யா..

விலைவாசியை சமாளிக்க காய்கறித் தோட்டம் நாமே உருவாக்கினால் என்ன!?

குளிர்நீர் குளியல்

கோழிகளையும் குஞ்சுகளையும் மற்ற பிராணிகளிடமிருந்து பாது காத்தல்.
