எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு

என் நண்பர்கள் பல பேர் என்னிடம் முடி கொட்டுவதற்கு என்ன செய்வது என கேட்கின்றனர், இதற்கு ட்ரீட்மெண்ட் இருக்கா என்று கேட்கின்றனர். இதற்கு காரணம் எண்ணெய் குளியல் மறந்து போனதுதான்.
அவர்களின் வயது கேட்டால் 27அல்லது 28 ந்னு சொல்றாங்க, இந்த வயதிலேயே தலையில் பாதியை காணாமல் போய் இருக்கு, பாவமாகவும் இருக்கு.
நண்பர்களே தயவு செய்து எண்ணெய் தேய்ச்சு குளிங்க, தினமும் ஷாம்பூ போட்டு குளிச்சா கண்ணகள் பாடாயிடும், எண்ணெய் குளியல் இல்லாட்டி விந்தணுகளும் குறையும். ஆண்மைக்குறைவு ஏற்ப்படும், குழந்தையின்மை ஏற்ப்படும்.
நமது சருமம் மற்றும் கூந்தலுக்கு எண்ணெய் சத்தானது அவசியம். இரண்டிலும் இயல்பிலேயே மிதமான கொழுப்பும் எண்ணெய் சுரப்பும் இருக்கும். அந்த இரண்டும் நம் சருமம் மற்றும் கூந்தலுக்குக் கவசம் போன்றவை. இதைத் தக்க வைத்துக்கொள்ள வெளியிலிருந்து எண்ணெய் தடவுவது, மசாஜ் செய்து குளிப்பது போன்றவை அவசியம்

qqqq

.
ஒரு 15 வருடங்களுக்கு முன் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது நமது கிராமங்களில் சனிக்கிழமை அன்று எண்ணெய் குளியல் நிறைய வீடுகளில் நடக்கும்
இன்று அது அரிதாகி விட்டது. தீபாவளி அன்று தான் நம் வீட்டில் எண்ணெய் தேய்த்துக் குளியல் நடக்கும் ஆனால் அதன் முழுப்பயனும் அன்று ஒரு நாள் மட்டும் குளித்தால் நடக்குமா? நிச்சயம் நன்மை இருக்காது.
எப்படிக் குளிப்பது :

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு என்று நாட்கள் உள்ளன. ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும்,
பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் செய்ய வேண்டும்.
எண்ணெய்க் குளியலுக்கு ஏற்ற எண்ணெய் நல்லெண்ணெய் தான். அல்லது தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய். ( ப்ராண்ட் எண்ணெய்கள் நல்லது இல்லை, அதில் மெழுகு சேர்ந்திருக்கும் ஜாக்கிரதை)
அது கொஞ்சம் சூடு படுத்தி முதலில் உச்சந்தலையில் சூடு பறக்க தேய்க்க வேண்டும். பின் உடலின் ஒவ்வொரு பாகங்களிலும் மெதுவாக தேய்க்க வேண்டும், (உடம்பில் தேய்க்காட்டிலும் பரவயில்லை தலையில் மட்டுமாவது தேய்ங்க) பின் வெந்நீரில் சீகக்காய் அல்லது அரப்பு போட்டு எண்ணெய் போக குளிக்க வேண்டும்.
(அரப்பு சீகக்காய் காதி பவன் கடைகளில் அல்லது நாட்டு மருந்து கடைகளில் வாங்கி உப்யோகியுங்கள், சீகக்காய் பேஸ்ட் உபயோகம் செய்யாக்கூடாது அதில் வேதிப்பொருட்கள் உள்ளது அது ஆபத்து)
குழந்தைகளுக்கு:

ஒரு வயது‌க்கு‌ள் இரு‌க்கு‌ம் குழ‌ந்தைகளாக இரு‌ந்தா‌ல் அவ‌ர்களு‌க்கு சுத்தமான தேங்காய் எண்ணெயை வார‌த்‌தி‌ல் ஒரு நாளாவது உட‌ல் முழு‌க்க‌த் தட‌வி‌வி‌ட்டு வெதுவெது‌ப்பான ‌நீ‌ரி‌ல் கு‌ளி‌ப்பா‌ட்டு‌ங்க‌ள்.
ஒரு வயது‌க்கு மே‌லிரு‌க்கு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு ந‌ல்லெ‌ண்ணை வா‌ங்‌கி வ‌்ந்து, ச‌னி‌க் ‌கிழமைக‌ளி‌ல் உட‌ல் முழுவது‌ம் தே‌ய்‌த்து ‌சி‌றிது நேர‌ம் ஊற‌வி‌ட்டு ‌பி‌ன்ன‌ர் கு‌ளி‌க்க வை‌க்கலா‌ம்.
முத‌ல் இர‌ண்டு மூ‌ன்று வார‌ங்களு‌க்கு ந‌ல்லெ‌ண்ணை தே‌ய்‌த்தது‌ம் கு‌ளி‌க்க வை‌த்து ‌விடு‌ங்க‌ள். பு‌திது என்‌பதா‌ல் உடலு‌க்கு ஏற்று‌க் கொ‌ள்ள ‌சில நா‌‌‌ள் ‌பிடி‌க்கு‌ம். ந‌ல்லெ‌ண்ணைய புரு‌வ‌த்‌தி‌ல் தடவ ம‌ற‌க்க வே‌ண்டா‌ம்.
4வது வார‌த்‌தி‌ல் இரு‌ந்து 10 ‌நி‌மிட‌ம் முத‌ல் ஊற ‌வி‌ட்டு‌க்‌ கு‌ளி‌ப்பா‌ட்டு‌ங்க‌ள் கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் தோலுக்கு என்ன பயன்?
நமது உடலில் சூடு அதிகரிப்பதால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. நமது நாடு வெப்பமான நாடு. எனவே வேனல் கட்டி, கொப்புளங்கள், வேர்க்குரு போன்றவை வெயில் காலத்தில் ஏற்படுவது இயல்பு.
வாரத்திற்கு இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் இப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
உடலில் எண்ணெயை நன்றாக அழுத்தித் தேய்ப்பதன் மூலம் அது தோலில் உள்ள மேல் அடுக்குகளுக்குள் சென்று பல நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது.
வியர்வையின் காரணமாக தோலில் ஏற்பட்டுள்ள அழுக்குகளையும், நுட்பமான அடைப்புகளையும் எண்ணெய்க் குளியல் நீக்கிவிடுகிறது.
தோலின் கழிவான வியர்வை தடையில்லாமல் வெளியேறுகிறது. இதனால் உடலில் பல உள்ளுறுப்புகள் சிறப்பாகச் செயல்பட வழி ஏற்படுகிறது.
வேனல் கட்டி, கொப்புளங்கள், வேர்க்குரு போன்றவை ஏற்படாமல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது தடுக்கிறது.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் தோலில் பளபளப்புக் கூடுகிறது. வறண்ட தோல் உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது மிகவும் அவசியம்.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடல் ரொம்பக் குளிர்ச்சியாகிவிடுமே, அதனால் பாதிப்பு ஏற்படாதா?
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடல் குளிர்ச்சியடைகிறது. அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை. உடலில் சூடு குறைவதால் மனம் ரிலாக்ஸ் ஆகிறது.
உடல் ரிலாக்ஸ் ஆகிறது. நல்ல இயற்கையான தூக்கம் வருகிறது. தூங்கி எழுந்ததும் உடல், மனம் புத்துணர்ச்சி அடைகிறது.
இயற்கையான அலுப்பு மருந்தாக எண்ணெய்க் குளியல் இருக்கிறது.
வெப்பத்தாலோ, தூக்கமில்லாததாலோ கண்களில் ஏற்படும் எரிச்சல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் இல்லாமற் போகிறது. கண்கள் பொங்குவது நின்றுவிடுகிறது. தலையும், கண்களும் குளிர்ச்சியடைகின்றன.
நன்மைகள் :

முடி கொட்டாது, நன்கு வளரும்
இளநரை வராது
உடல் சூட்டைத் தணிக்கும்.
உடல் புத்துணர்ச்சி பெறும்.
உடலில் உள்ள நரம்புகள் செயல்பாடு அதிகரிக்கும்.
திருமணம் ஆன தம்பதிகளுக்கு இல்லற இன்பம் அதிகரிக்கும்
(இதற்காகத்தான் திருமணம் ஆன இரண்டு நாட்கள் கழித்து எண்ணெய் தேய்த்து விருந்து வைக்கின்றனர்)
சளி தலைவலி தொல்லையில் இருந்து விடுபடலாம்.
ஆரோக்கியமான தூக்கத்திற்கு வழி வகுக்கும்.
நோயற்ற வாழ்விற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் எண்ணெய் குளியல் அவசியம்

 

One Response

  1. Srini 22/04/2020

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline