வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேகர் ஐயா -05
பீஜாமிர்தம் ( விதை நேர்த்தி கரைசல் )
தேவையான பொருட்கள் :
1. பசு மாட்டு சாணி 5 கிலோ
2. கோமியம் 5 லிட்டர்
3. சுட்ட சுண்ணாம்பு 50 கிராம்
4. மண் ஒரு கைப்பிடி அளவு
5. தண்ணீர் 20 லிட்டர்
இவை அனைத்தையும் ( சுட்ட சுண்ணாம்பு இல்லாமல் ) சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நன்றாக ஊற விடவேண்டும்.
சுண்ணாம்பு சேர்க்கும் முறை :
சுட்ட சுண்ணாம்பு விதை நேர்த்தி செய்யும் கரைசலில் ஒரு மணி நேரதிற்கு முன் சேர்க்கவும்
விதை நேர்த்தி செய்ய விதைகளை இந்த கரைசலில் 2 மணி நேரம் ஊற விட வேண்டும். மெல்லிய தோல் உடைய விதைகளை நிழலில் ஒரு தார் பாய் சாக்கில் மேல் பரப்பி , விதைகளின் மேல் பிஜமிர்தகரைசலை தெளித்து மெதுவா புரட்டி விடவும் .
நாற்றுகளாக இருந்தால் முங்கில் குடில் வைத்து அதன் வேர்களை 15 நிமிடம் நனையவிட்டு பிறகு நடவு செய்ய வேண்டும்.
பயன்கள் :
வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு , நூர் புழு நோய்கள் தடுக்கப்படும்.
No Responses