ஊறுகாய் புல் தயாரிப்பு.
இதன் உழைப்பும் , வாழ்த்துகளும் சென்று சேரவேண்டிய இடம் எனது மரியாதைக்குரிய சகோதரர் திரு: ஊரோடி வீரகுமார் .
மேல்நாடுகளிலும்,நம் நாட்டின் வடமேற்கு, மத்திய மாநிலங்களிலும் கால்நடை வளர்ப்போர்கள் பயன்படுத்தும் அளவிற்கு நம் தமிழக கால்நடை வளர்ப்போர்கள் சைலேஜ் என்று அழைக்கப்படும் பதனப்படுத்தப்பட்ட பச்சை புல் அல்லது ஊறுகாய் புல் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதில்லை
இதற்கு என்ன காரணம் என்ற கேள்வி நீண்ட காலமாகவே எனக்குள் இருந்துகொண்டே இருக்கிறது.மிகச் சமீபமாக வேளாண், கால்நடை வளர்ப்பு பணிச் சுமைகள் குறையவே….( ஆமாங்க .. விற்க முடியாத இரண்டு தொத்தல் பசுவும்…. வண்டிமாடும்தான் என்னுடையகால்நடைசெல்வவளம் ) எனது நேரத்தை ,சிந்தனையையும், செயலையும், என் சக குடியானவர்களுக்கு பயனுள்ள வகையில் செலவு செய்யலாமே எனும் எண்ணம் மேலோங்கியது
i like ur agree interest anna