பனையை கற்பத்தரு என்று அழைத்த நாம் அதை அழித்து வருகிறோம்

பனையை கற்பத்தரு என்று அழைத்த நாம் அதை அழித்து வருகிறோம் பனையின் மாண்பை அறிந்த”கம்போடியா மக்கள்”அதை மதிப்புகூட்டப்பட்ட பொருளாக மாற்றி அதன் மதிப்பை உலகம் அறிய செய்கின்றனர்

பனை மரம் உயரமாக மின்னலை உள்வாங்கி வேருக்கு கடத்தி பூமியில் உள்ள High reactivity elements எனப்படும் சோடியம் பொட்டாசியம் கால்சியம் போன்ற தனிமங்களை அயனியாகாக்குகிறது அந்த உலோக அயனிகளை உணவாக எடுக்கும்போது மனித உடலுக்கு பெரும் நன்மை அளிப்பதால் அதனை “கற்பத்தரு” என்றழைத்தனர் !

சித்தமருத்துவத்தில் ஜெயநீர் மற்றும் முப்பு உருவாக்கும் போது கள்ளு பயன்படுத்துவது இதற்காக தான் முட்டியில் பூசபடும் சுண்ணாம்பை 2 நாழிகையில் அயனியாக மாற்றிவிடுகிறது பதநீர்.

எழுதுகோலும் தெய்வம் என்றார் பாரதி. எனில் பனைஏடும் தெய்வம் தானே?

வரலாறு அளித்த கருவிகளில் முதன்மையானது கள்ளும்,ஓலையும் இவை இல்லையேல் சங்கப்பாடல் இல்லை இதை நம்மால் மறுதளிக்க முடியுமா?

அறம்,மறம் என்று வேடம் தரித்துகொண்டு பனையின் கொடைகளை மறந்து போனோம் ஆனால் கம்போடியா தொல்குடிகள் அதன் மகத்துவம் அறிந்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு போய் உள்ளனர் அவர்களை போல நாமும் பனையில் இருக்கும் பொருட்களை மதிப்பு கூட்டி உலக தரத்திற்கு உயர்த்த முயலுவோம் …..

கள்ளும்-பதநீர் மறந்ததால் தமிழகம் இன்று நோயின் பிடியில்

1.கள் மற்றும் பதநீர் குடிப்பதால் நரம்பு மண்டலம் பலப்படுகிறது அதனால் தமிழன் ஆண்மை குறைவிற்காக லேகியம் வாங்கி சாப்பிடும் நிலமைகள் வந்திருக்காது.

2. 40% அதிகமான சர்க்கரை நோயாளிகள் தமிழகத்தில் உருவாக காரணம் பனைவெல்லம் மறக்கடிக்கபட்டு கரும்புசர்கரை புகுத்தபட்டதனால் என்பதை மறுதளிக்க முடியுமா பணக்காரர்களின் வியாதியாக இருந்த சர்க்கரை நோயை அனைவருக்கும் பொதுவுடமை ஆக்கியது பனங்கருப்பட்டிக்கு மாற்றாக கரும்பு சர்க்கரையை பயன்படுத்தியதே ???

3.பதநீர் அருந்திய பெண்களுக்கு மூட்டுவலி,மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தொந்தரவு இல்லாமல் இருந்தது மகப்பேறு காலங்களில் பால் சுரப்பு மிக அதிகமாக இருந்தன கால்சியம் பற்றாக்குறையால் ஏற்படும் குறைபாடுகள் பல் சம்மந்தமான குறைபாடுகள் இருக்கவேஇருக்காது .

4.பதநீர் அருந்தும் ஆண்களுக்கு முடி நரைக்காது 60 வயதிற்கு மேல் தான் நரைவரும்

5.வயோதிகம் ஏற்படாது இளமையாக இருக்கலாம், இன்று பெருமளவு பிரச்சினை ஆண்களின் விந்துக்களில் உள்ள உயிரணு குறைபாட்டை பதநீர் சரி செய்யும் அதற்கு காரணம் பதநீர் மற்றும் கள்ளில் மிகுதியாக உள்ள இரும்பு,கால்சியம்,அமினோ அமிலம் மற்றும் புரதசத்துக்கள்

பனையின் நற்பண்புகள் தமிழர்கள் அறியாத ஒன்றல்ல …

2 Comments

  1. ஐெகன் 23/11/2016
    • CHITRA NAGARAJAN 04/06/2017

Leave a Reply to ஐெகன் Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline