ஆலயத்தைப்பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்
– ஒரு ஆலயத்தில் இருந்து கொண்டு மற்ற ஆலயத்தைப்பற்றி புகழ்ந்து பேசக்கூடாது
– கோவில்களில் பிரஸாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது
– ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக் கூடாது
– உடம்பிலிருந்து உதிர்ந்த மயிரையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்கக் கூடாது . உடனே வெளியே எரிந்து விட வேண்டும்
– நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடக்கொடாது
– ஆலயத்தில் தெய்வ விக்ரஹத்தை தொட்டு பூஜை செய்யும் அர்ச்சகரை தவிர மற்றவர்கள் கையால் வீபூதி குங்குமம் முதலிய ப்ரஸாதத்தை பெற்றுக்கொள்ள கூடாது
– விஷ்ணு ஆலயங்களில் பெருமாள் தீர்த்தத்தை இரண்டு கைகளாலும் பெற்றுக்கொண்டு, பாதியை சாப்பிட்டு விட்டு, மிச்ச ஜலத்தை தலையில் தடவி (தெளித்து) க் கொள்ளக்கூடாது. (தனியாக ஜலம் வாங்கி தலையில் ப்ரோஷித்துக் கொள்ளலாம்)
– ஈரத்துணியை உடுதிக்கொண்டோ, குளிக்காமலோ, எந்த ஒரு ஆலயத்தின் உள்ளேயும் செல்லக்கூடாது
– வீதிகளில் சுவாமி உலாவரும் போது ஸ்வாமியை பிரதஷிணம் செய்யக்கூடாது (நமஸ்காரம் மட்டும் செய்யலாம்)
– ஆலயத்துக்குள் எந்த ஒரு தனி மனிதனையும் நமஸ்காரம் செய்யக்கூடாது
– இரண்டு கன்னங்களிலும் கைகளை வைத்துக்கொண்டு நிற்பதோ , உட்கார்ந்து கொள்வதோ கூடாது
– திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிக்கு சென்று வந்தவுடன் குளிக்க கூடாது
– அபிஷேகம், பூஜை, ஜபம், ஹோமம் முதலிய தெய்வ காரியங்களை செய்யும் போது கைலி (லுங்கி ) கட்டிக்கொள்ள கூடாது
– ஈரத்துணியை உடுத்திக்கொண்டு உணவு அருந்தக்கூடாது
– சாப்பிடும் அன்னத்தை உருண்டையாக உருட்டி சாப்பிடக்கூடாது
– வபனம் (ஷேவ் ) செய்து கொள்ளும் முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது
– தாய் தந்தை உள்ளவர்கள் ஒருபோதும் வெள்ளிக்கிழமையன்று ஷவரம் (ஷேவ் ) செய்துக்கொள்ள கூடாது
– பெண்கள் கோவிலில் அங்கப்ரதக்ஷிணம் செய்யக் கூடாது (பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது)
– பெண்கள், மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline